Tuesday, 25 August 2020

தங்கைக்காக பகுதி -5

நான் பதினோராம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போது என்னுடைய பாட்டி இறந்து விட்டாள் அதற்கு பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போது எங்களிடம் பணம் இல்லை அதற்கான எந்த வருவாயும் இல்லை , அதனால் நன்கு யோசித்து எப்படியும் என்னால் டாக்டர் ஆக முடியாது அதனால் தங்கையை படிக்க வைத்து பெரிய இன்ஸ்பெக்டர் ஆக்க முயற்சி செய்யலாம் என நான் வேலைக்கு செல்ல முடிவு செய்தேன்.
ஹேமா டீச்சர் மாதம் என்னால் முடிந்த பணம் தருகிறேன் நீ பள்ளியை முடி அதற்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்றார், எனக்கும் சரி என்று தோன்றியது. பிறகு ஹேமா டீச்சர் எனக்கு இலவச தையல் மிஷன் வாங்கி கொடுத்தார். நான் தினமும் ஹேமா டீச்சர் வீட்டுக்கு வேலை செயதுவிட்டு பிறகு பள்ளிக்கு சென்று வந்து மீதி நேரங்களில் துணி தைக்க ஆரம்பித்தேன். இதனால் எங்களுக்கு அதிகமா பணம் கிடைக்கவில்லை என்றாலும் நானும் என் தங்கையும் வாழ போதுமானதாக இருந்தது. என் தங்கை பெண் பிள்ளை என்பதால் அவள் நன்றாக வளர வேண்டும் என்று , நான் குறைவாக சாப்பிட ஆரம்பித்தேன் , என்னுடைய செலவை குறைத்து கொண்டு அவளுக்கு சத்துள்ள உணவுகளை வாங்கி கொடுத்தேன் ...இதன் விளைவு அவள் என்னை விட உயரமாக நல்ல உடல் அமைப்பு பெற்றால் நானோ மெலிந்து மற்றும் சத்து இல்லாதவன் போல் இருந்தேன்.இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது நானும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டேன் என் தங்கையும் பத்தாம் வகுப்பு முடித்து விட்டாள். இந்த விடுமுறை நாட்களில் அவளை நான் ஒரு பயிற்சி பள்ளியில் சேர்த்து படிக்க சொன்னேன்

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...