நான் ஆண் என்பதை ஒருபோதும் மற்ற பெண்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வதில் கவனமாக இருந்தேன். என்னுடைய வகுப்பில் எனக்கு மீரா என்னிடம் முதலில் பேசினால் பிறகு நண்பர்களாக மாறினோம் மற்றும் அவள் அவளுடைய நண்பர்களை(தேவி, விஜி, மீனா) அறிமுக படுத்தினாள். எல்லோரும் என்னிடம் நன்றாக பேசினர். நாங்கள் ஐந்து பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது , படிப்பது சாப்பிடுவது என ஒன்றாகவே இருந்தோம். அன்று இரவு கல்லூரியில் நடந்ததை பற்றி தங்கையிடம் கூறினேன்.எனக்கு நண்பர்கள் கிடைத்ததை நினைத்து அவளுக்கு மகிச்சியாக இருந்தது , பார்த்து அண்ணா கடைசியில்" அக்கா" வாக அழைக்க வைத்து விடாதீர்கள் என்றாள்.அப்டியேல்லம் ஒன்றும் ஆகாது என்றேன்...
மறுநாள் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது அட்டவணை வந்தது அதில் புதியதாக சேர்ந்தவர்களை வரவேற்க நிகழிச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளதாவும் விருப்பம் உள்ளவர்கள் நடனம், பாட்டு, கவிதை போன்ற உங்களிடம் இருக்கும் திறமையை கொண்டு நீங்கள் பெயர் கொடுக்கலாம் என்றார். மீரா எழுந்து நாங்கள் குழு நடனம் ஆடுகிறோம் என்று சொல்லி எங்கள் ஐந்து பெயர்களை கொடுத்தால் எனக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது. இடைவேளை போது நான் மீராவிடம் எனக்கு நடனம் ஆட வராது தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்றேன் அதற்கு அவள் நாம் ஐந்து பேரும் சேர்ந்து நடனம் ஆடுகிறோம் என்று சொல்லி மற்றவர்களை பார்த்தாள் அனைவரும் சரி என்றனர் பிறகு அவள் நாங்க சொல்லி தருகிறோம் என்றாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அன்று மாலை வீட்டுக்கு போனதும் சரோஜா அக்காவிடம் சொன்னேன் அவள் இன்னும் ஒரு வாரம் இருக்கு அதற்குள் சில அசைவுகளை சொல்லி தருகிறேன் அது கற்று கொண்டால் போதும் என்றாள். இரவு தங்கையும் , அக்காவும் என்னை அழைத்து பெண்களை போல இடுப்பை அசைப்பது பற்றி சொல்லி கொடுத்தனர் அதையே நாளை இரவு வரை நேரம் கிடைக்கும் போது பயிற்சி செய்ய சொன்னாள். கல்லூரியில் அவர்கள் எனக்கு நடனம் சொல்லி தந்தனர், வீட்டில் இவர்கள் சொல்லி தந்தனர். ஒரு வாரத்தில் எவ்வளவு கற்று கொள்ள முடியும் என்று தெரியவில்லை ஆனால் என் தலைவிதி ஆடித்தான் ஆக வேண்டும். மறுநாள் நிகழ்ச்சி எனக்கு ஒரே பயம் ஆனால் எனக்கு நந்து தைரியம் தந்தாள்.
Subscribe to:
Post Comments (Atom)
MOM'S LITTLE PRINCESS...part 1
Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...
-
We went to temple after marriage and we did pooja and we sat in temple. I asked her Keerthi when u will tell to aunty and mom....
No comments:
Post a Comment