Tuesday, 25 August 2020

தங்கைக்காக பகுதி -21

எங்கள் தெரு இருட்டாக இருந்ததால் நான் பயத்தில் நின்று கொண்டு இருந்தேன் அப்போது படத்தில் வருவது போல light தோரணைகள் போல இருந்தது ஒருவர் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தார். அருகில் வந்ததும் முட்டி போட்டு ரோஜா பூவை நீட்டி தலையை நிமித்தினார் அவரை பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி ஆண் இல்லை அது பெண். அவள் வேறும் யாருமில்லை கீர்த்தி தான். அவளிடம் இருந்து அந்த பூவை வாங்கமால் , நின்றேன் எனக்கு அவள் மீது கோவம். அவள் என்னிடம் நீ எதற்கு கோவமாய் இருக்கிறாய் என்று தெரியும் , அன்று அம்மா இருந்ததால் அப்படி சொன்னேன் அவர்களுக்கு உங்களை பிடிக்க வில்லை அதனால் தான் அப்படி பேசினேன் என்று சொல்லி கைய பிடித்தாள். நான் உதறினேன் அவள் இல்லை என்றாள் உன் நினைவாக இந்த செயின் நான் பாதுகாத்து வைத்து கொண்டு இருக்க மாட்டேன் என்றாள். அருகில் வந்து என்னை மன்னித்து விடு என்று கையை பிடித்தாள் , பிறகு அந்த செயினை என்னுடைய கழுத்தில் போட்டுவிட்டாள். பிறகு அவள் என் இடுப்பை பிடித்து அருகில் இழுத்து கட்டி அணைத்தாள். கொஞ்ச நேரம் அப்படியே ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டு இருந்தோம் . நான் அவளிடம் சரி நான்தான் என்று உனக்கு எப்படி தெரியும் என்றேன். அவள் நேற்று உங்கள் வீட்டு அருகில் கார் நின்று விட்டது அப்போதுத்தான் சரோஜா என்னை உங்க வீட்டிற்கு அழைத்து சென்றாள் அங்கே நான் கொடுத்த பொம்மை இருந்தது . அதற்கு பிறகுதான் உன் தங்கையிடம் பேசினேன் அவள் உன்னுடைய கதையை சொன்னாள் அதனால் தான் உடனே உன்னை பார்க்க வந்து விட்டேன். அதனால் தான் உன்னை பார்ப்பதற்கு முன் சிறு சிறு இன்பதரிச்சி கொடுக்கலாம் என்று எண்ணி செய்தேன். உனக்கு பிடித்து இருந்தால் போதும் எனக்கு இன்னும் 3 வருடங்கள் இருக்கு, அதுவரை நீ என்னுடைய காதலி நான் உன்னுடைய காதலன் அதற்கு பிறகு நாம் மாற்றி கொள்ளாளம் என்று சொல்லி சிரித்தாள். இந்த உடையில் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்றாள் எனக்கு வெட்கம் வந்தது.

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...