Tuesday, 25 August 2020
தங்கைக்காக பகுதி-2
நாங்கள் பாட்டியுடன் இருப்பதால் நானும் வீட்டு வேலைகளை (சமைப்பது, துணிகளை துவைப்பது, கோலம் போடுவது, etc...) செய்ய கற்று கொண்டேன். பாட்டி காலையில் எழுந்து என்னுடைய ஆசிரியர் ஹேமாவதி வீட்டில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அப்படியே கூலி வேலைக்கு செல்வாள். அவள் காலையில் செல்வதால் எங்கள் வீட்டு வேலைகளை நான்தான் செய்வேன் பிறகு நாங்கள் இருவரும் பள்ளிக்கு புறப்பட்டு செலவோம். எனக்கு ஹேமாவதி டீச்சர் என்றால் ரொம்ப பிடிக்கும், அவர் எங்களை எப்போதும் ஊக்குவிப்பார்கள், எங்களுடைய குடும்ப சூழ்நிலை எண்ணி என்னுடைய பாட்டியை அவர் வேலைக்கு சேர்த்து கொண்டார். ஒருநாள் அவர் எங்களிடம் இந்த பத்தாவது பொது தேர்வில் யார் அதிகமாக மதிப்பெண் வங்குகிறீர்களோ அவர்களுக்கு என்னுடைய பரிசும் மற்றும் அவர்களுக்கு கல்லூரி செலவை முடிந்து வரை பகிர்ந்து கொள்கிறேன் என்றாள். அவரை என்னையும் மற்றும் கீர்த்தியும் தனியாக அழைத்து இது உங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் நான் தலைமை ஆசிரியரிடம் பேசி உங்கள் கல்லூரி செலவை அரசு ஏற்கும் படி செய்கிறேன் என்றாள் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி, நாங்களும் சரி என்றும் சொன்னோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Keerthi Part - 11
Anu Aunty life story Aunty asked me to change the dress and we would go, and I sa...
No comments:
Post a Comment