Tuesday, 25 August 2020
தங்கைக்காக பகுதி 25
வெள்ளி கிழமை காலை மஞ்சள் சேலை அணிந்து கொண்டு பால் குடத்தை தூக்கி கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தேன் , அம்மா எனக்காக காத்து கொண்டு இருந்தார் நாங்கள் இருவரும் கோயில் சென்று பூஜை செய்து விட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்தோம் , நான் உன்னை கல்லூரிக்கு மட்டும் தான் புடவை கட்டி கொண்டு போக சொன்னேன் ஆனால் நீ செய்வதையெல்லாம் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது என்றார். நான் இன்னும் உங்கள் பழைய மாணவன் ராஜா தான் எனக்கு அப்படி ஒரு எண்ணமில்லை உங்களுக்கு பயமாக இருந்தால் சொல்லுங்கள் நான் இப்போதே நிறுத்தி விடுகிறேன் என்றேன்.நான் உன்னை நம்புகிறேன் பரவாயில்லை விடு ஆனால் வீட்டில் நீ ஆண் உடை தான் அணிய வேண்டும் என்றார்...இரண்டு நாட்கள் கழித்து நான் கல்லூரிக்கு சென்றேன், விரைவில் exam வருவதால் , படிப்பதற்கு லீவு விடுவார்கள் அதை பற்றி மீரா பேசிக்கொண்டு இருந்தால், நான் சென்று அவர்கள் பக்கத்தில் அமர்த்தேன் அப்போது மீரா இன்றைக்கு வெளியே செல்லலாம் என்று சொன்னால் , எதுக்கு என கேட்டேன், மீரா exam வருகிறது அதனால் கடைசி exam அன்றைக்கு நான் அனைவரும் ஒரு மாதிரியான ஒரே கலரில் புடவை கட்டலாம், விடுமுறை நாட்களில் நாம் பேசிக்கொள்ள நான் whatsapp இல் "SUPER GIRLS" குரூப் பண்ணலாம் என்றாள். எல்லோரும் இது நல்ல idea என்று சொன்னார்கள் , நான் என்னிடம் மொபைல் இல்லை என்றேன். உடனே விஜி அவரகிட்ட கேளு வாங்கி கொடுப்பார் சொல்லி என் பையில் இருந்து நம்பர் எடுத்து கால் பண்ணி இந்த விஷயத்தை சொல்லி விட்டு, சரி நாங்கள் அங்கு சென்று கால் பண்றேன் சொல்லி வைத்துவிட்டால். இவர்களுக்கு படிப்பை தவிர வேறு எது என்றாலும் ஓகே தான். அன்று மதியம் விஜி எங்களை ஒரு கடைக்கு அழைத்து சென்று என்னுடைய பெயரை சொன்னால், அவர் ஒரு box கொடுத்தார் அதில் ஏற்கனவே sim card இருந்தது. அதை எடுத்து பார்த்து கொண்டு இருந்தேன் ..திடிரென்று video கால் வந்தது , attend பண்ணினேன் அந்த பக்கம் கீர்த்தி , என்னை பார்த்து hi சொல்லி , இது உனக்குத்தான் இனிமேல் நாம் இப்படி பேசிக்கொள்ளமாம் என்றாள், நான் thanks சொல்லிவிட்டு cut பண்ணினேன். அதற்கு பிறகு அவர்கள் என்னை கிண்டல் பண்ண அரபித்தனர், பிறகு என்னுடைய நம்பரை மீரா அந்த குரூப் ல் சேர்த்து விட்டாள்.
Subscribe to:
Post Comments (Atom)
MOM'S LITTLE PRINCESS...part 1
Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...
-
We went to temple after marriage and we did pooja and we sat in temple. I asked her Keerthi when u will tell to aunty and mom....
No comments:
Post a Comment