Tuesday, 25 August 2020

தங்கைக்காக பகுதி-3

ஒருநாள் கீர்த்தி பள்ளிக்கு வரவில்லை, யாரோ ஒருவரை காப்பாற்ற சென்று விபத்தில் அடி பட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாக மாணவர்கள் பேசி கொண்டு இருந்தனர் , நானும் அவளை சென்று பார்த்தேன், அவளுடைய மருத்துவ செலவை அவர்களே ஏற்று கொண்டனர்.ஒருவாரத்திற்கு பிறகு அவள் பள்ளிக்கு வந்தாள்.ஒருநாள் பாட்டிக்கு காய்ச்சல் அதனால் அவள் வேலைக்கு செல்ல முடியவில்லை , அவருக்கு பதிலாக என்னை போக சொன்னார். நான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றேன் , அதற்கு பாட்டி இன்று ஒருநாள் மட்டும் என்றாள். நானும் சரி என்று சொல்லி ஹேமாவதி டீச்சர் வீட்டுக்கு சென்றேன், அவருக்கு என்னை பார்த்ததும் ஆச்சர்யம் , என்ன விஷயம் ராஜா காலையில் எங்க வீட்டிற்கு வந்துருக்க என்றாள். பாட்டிக்கு உடம்பு சரியில்லை அதனால் தான் அவருக்கு பதிலாக என்னை அனுப்பினார், ஓ! உனக்கு வீட்டு வேலை கூட செய்ய தெரியுமா என கேட்டு சிரித்து கொண்டு உள்ளே அழைத்தார். நான் உள்ளே சென்றதும் வீட்டை சுற்றி காட்டிவிட்டு வர சென்றார் , நான் சமையல் அறைக்கு சென்று பாத்திரங்களை கழுவி விட்டு , சமைத்து விட்டு , துணி துவைக்க சென்றேன். காலை 8.30 டீச்சர் பள்ளிக்கு ரெடியாகி கீழே வந்து சாப்பிட உட்கார்ந்தார் , பிறகு என்னை அழைத்து சாப்பிட சொன்னார். நாங்கள் இருவரும் சாப்பிட தொடங்கினோம் , அவர் சாப்பிட்டு மிக அருமையாக இருக்கு , இத்தனை வருடங்களாக சமைக்கிறேன் என்னால் கூட இவ்வளவு அருமையாக சமைக்க தெரியாது, நீ எப்படிடா இப்படி என்று சொல்லி சிரித்து கொண்டே பேசாம நீயே தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து வேலை செய் , நானும் முடிந்து வரை உதவி செய்கிறேன் பிறகு நீ இங்கேயே படிக்கலாம் என்றாள். சரி உன்னோட தங்கை எப்படி உன்னை மாதிரி நன்றாக படிப்பார்களா என்று கேட்டார். அவள் படிப்பில் சுமார்தான் ஆனால் போலீஸ் ஆகி விட வேண்டும் என்ற கனவில் இருகிறாள் மற்றும் என்னுடைய கனவும் அது. டீச்சர் என்னிடம் சரி , உனக்கு எதற்கு என்னை பிடித்துருக்கு ? என கேட்க , நான் அவரிடம் நீங்கள் தான் எனக்கு படிக்க உதவி செய்கிரீர்கள் நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்கிறிர்கள் என்றேன். திரும்பவும் அவர் என்னிடம் , இதே பதிலை தான் எல்லோரும் சொல்வார்கள் நீ ஏதாவது வித்தியசமாக சொல்லு என்றார். நான் அவரிடம் நீங்கள் கோபப்பட மாட்டிர்கள் என்றாள் சொல்வேன் என்றேன், அவரும் சரி என்றார் நீங்கள் கட்டும் புடவை மற்றும் கொஞ்சமா mackup போட்டு வருவது எல்லாமே பிடிக்கும் என்றேன் , ஹேமாவதி முகம் மாறியது பிறகு சிரித்து கொண்டே என்னடா பெண்களை போல புடவை மற்றும் mackup பற்றி பேசுகிறாய் ..சத்தியமாக நீ ஆண் தானே என கேட்க ..ஐயோ டீச்சர் நான் பையன் தான்...அவர் சும்மா தான் சொன்னேன் பயப்படாத சொல்லி எழுந்து சென்றார்கள். நானும் தினமும் வேலைக்கு வருவது இங்கேயே படிப்பது என நாட்கள் ஓடி கொண்டு இருந்தன.

No comments:

Post a Comment

Keerthi Part - 11

                                                           Anu Aunty life story Aunty asked me to change the dress and we would go, and I sa...