Wednesday, 23 December 2020

என் நித்திய வாசம்💘 1


மருத்துவமனையின் பிரசவ அறை அது உடம்பிலுள்ள அத்தனை நரம்புகளும் வலியில் துடிக்க , வலி மிகுதியால் கண்களில் கண்ணீரும், புலம்பலுமாய், அறை மயக்கமுமாய்  துடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவள் வலியை தன் வலியாய் மனதில் ஏற்று கண்ணீர் ஓடிய விழிகளுடன் பதட்டத்தின் உச்சியில் அவள் கைகளை பிடித்து கொண்டிருந்தான்  அவன்.
அரை மயக்கமாய் நீர் நிறைந்த கண்களில் மங்கலாகவே அவன் முகம் தெரிந்தது அவளுக்கு. ஆயினும் அவளால் உணர முடிந்தது அவனின் ஆழ் காதலை அவன் கைகளின் இறுக்கத்தில். பாசமாய் அவன் இப்பொழுது அவள் தலையை தொட அவன் கைகளின் டாட்டூ காணக் கிடைக்கிறது அவளுக்கு. "நிநி" என ஸ்டைலாய் படு அழகாய் அவன் வெளிர் நிற கைகளில் அம்சமாய் இருந்தது அந்த டாட்டூ.

வலியின் உச்சத்தில் அவள் வீறிட்டு அலற,
“அம்மாஆஆஆஆஆஆ”
அதே வலி மிகுந்த அலறலுடன் எழுந்து உட்கார்ந்தாள் நம் நாயகி.
முகமெல்லாம் வியர்வை துளி நடுக்கமுமாய் தன் வயிறை தடவிப் பார்த்துக் கொண்டாள். இன்னமும் அவ்வலியில் இருப்பதாய் தோன்றியது அவளுக்கு.
“ச்சே கனவா!!!” மனதிற்குள் கூறிக் கொண்டாள்.
தன் பக்கத்தில் இருந்த  நீரை முழுவதுமாய் குடித்தாள்.
பிறகு அவள்,
“ஹப்பா குழந்தை பெத்துக்கிட்ட பொண்ணுங்களுக்கெல்லாம் கோயில் வச்சே கும்பிடலாம் போலயே!!! என்னாஆஆஆ வலி!… செத்தே போயிருலாம் போல இருந்துச்சு” என வாய்விட்டே கூறி திரும்பவும்  உறங்கிப் போனாள்.
இதே மாதிரி கனவு நம்முடைய கதையின் நாயகனுக்கும் அன்றிரவு வந்தது.
மறுநாள் சென்னையிலுள்ள ஷாப்பிங் மாலில், நாயகி  கோபமாய் வந்துக் கொண்டிருந்தாள்
அவள் பின்னாடி அவளின் பெயர் சொல்லி கூப்பிட்டு கொண்டே  “ஹே நிவாஸ்!! சாரிடி நில்லுடி” என சத்தமாய் கத்தி கொண்டு வந்தாள் அவளின் தோழி பவானி.
அதேப்போல் இன்னொரு பக்கம் நம் நாயகன்  கோபமாய் வந்துக் கொண்டிருந்தான் ,
அவன் பின்னாடி , “டேய் நித்தி நில்லுடா” எனக் கூறிக் கொண்டே  அவனின் அம்மா வந்தாள்.
நிவாஸ் என்று கூப்பிட்டதால் பவானியின்  மீது கோவம் கொண்டு  திரும்பி, “ஜஸ்ட் ஸ்டாப் காலிங் மீ நிவாஸ், பவாணி... பையனை கூப்டுற மாதிரி இருக்கு” என முகத்தை கடுகடுவென வைத்துக் கூறிய அதே நேரம்,   "பிலீஸ் டோண்ட் கால் மீ லைக் திஸ் மாம்… உங்களுக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் வெளில வந்தா இப்டி கூப்பிடவேண்டாம் என்று கத்தியதால், அவளும் இவனும் இருவருமே மற்றவரின் பேச்சைக் கேட்டு திரும்பி முகத்தை பார்த்தனர்.
தன்னைப் போலவே அவளுடைய பெயரை சுருக்கி கூப்பிடுவது அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை கவனித்தான்.
அவளும் இவனை பார்க்க வேகமாய் திரும்ப , இருவரும் இடித்து கொண்டனர் அவன் அப்படியே கீழே விழும் போது அவனை அப்படியே அவள் கைகளில் பிடித்து கொண்டாள்.
அவளுக்கு அந்த நேரம்  மனதில் இனம்புரியா உணர்வு , அவன் கைகளில் கண்ட டாட்டூ அவளை அப்படியே வியப்பில் ஆழ்த்தியது.
அவனருகில் வந்த அவனுடைய அம்மா, “ஹே நித்தி!! என்னாச்சுடா??” என பதறியவாறு கூறி அவள் மடியில் சரிந்திருந்த அவளின் கன்னங்களில் தட்டினாள். ஏங்க இப்ப தானங்க, அவங்க உங்களை அப்படி கூப்டாதீங்கனு சொன்னாங்க?” என்று நிவாஸ் கேட்க,
“ஆமா இது இப்ப ரொம்ப முக்கியம்” என வாய்க்குள் முனகிக் கொண்டே , தன் பையிலிருந்த நீரை அவள் முகத்தில் தெளித்து எழுப்பினார் அவனுடைய அம்மா. அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டிருக்க,  அவள் அவனை பார்த்து “என்னங்க காலைல சாப்பிடலையா?? ” கேட்டாள்.
அதற்கு அவன்
“ஆமாங்க இல்லைங்க. சாப்பிட்டேன்” என வாயில் வந்ததை உளறினான். பிறகு அவன் அவளிடம் நன்றியை சொல்லிகொண்டு இருக்கும் போது பவானி அவளின் கைப்பற்றி “வாடி போகலாம்” என்றால்.
செல்ல இருந்தவளை அழைத்து
“எக்ஸ்க்யூஸ் மீ!! மே ஐ நோ யுவர் நேம்??” எனக் கேட்டான்.
பவானியின் அவளின் கையை  பிடித்து நடக்க, நிவாஸ் அவளிடம் “அவங்க பேர தான கேட்டாங்க?? , அவள் கேட்க, பவானி பேசாமல் நடந்து சென்றால்,  அப்போது அவள் நிவாஸ் விதி இருந்தால் நீங்கள் இருவரும் சந்திக்க நேரிடும் அப்போது அவரின் பெயரை கேட்டு கொள் என்றாள். நம்மனுடைய நாயகனும் அவனின் அம்மாவை அழைத்து கொண்டு சென்றான்.
 

No comments:

Post a Comment

MOM'S LITTLE PRINCESS...part 1

Vaishu is the heroine of this story, and his real name is Vishnu, and his father is Raju, and his mother is dead, and the stepmo...